மேய்க்கால் நிலங்களில் பசுந்தீவன புல்வகை உற்பத்தி செய்ய ரூ.2.33 கோடி அனுமதி

சென்னை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேய்க்கால் நிலங்களில் அதிக மகசூல் தரும் பசுந்தீவன புல்வகைகளை உற்பத்தி செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தீவனம் கிடைக்கும். 5 மாவட்டங்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய ரூ.2.33 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி கடந்த மாதம் 6ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 25 ஏக்கரில் இருந்து சுமார் 3,500 மெட்ரிக் டன் பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்படும்.

The post மேய்க்கால் நிலங்களில் பசுந்தீவன புல்வகை உற்பத்தி செய்ய ரூ.2.33 கோடி அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: