அயோத்திதாச பண்டிதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு

சென்னை: சென்னையில் திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 175வது ஆண்டு விழாவின் நினைவாக உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைத்தார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் உருவச் சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபம் திறப்பு விழாவில் வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post அயோத்திதாச பண்டிதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: