இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே பஸ்சில் பயணித்த கன்னியாகுமரியை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயமடைந்த விருதுநகர் அந்தோணிராஜ் (51), மதுராந்தகம் ஞானராஜ்(30), திருநெல்வேலி இசக்கியம்மாள்(55), லட்சுமி, ஜோதி, விஜயலட்சுமி(50) ஆகிய 6 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அந்தோணிராஜ் அங்கு இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது சென்னை பஸ் மோதி 2 பேர் பலி:5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
