விருதுநகர்: ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால் 50 தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது. நச்சாடை பேரி பகுதியில் உள்ள நிலத்தில் புகுந்து தென்னை மரங்கள், மின் கம்பங்களை யானை சேதப்படுத்தியது. சேதமடைந்த தென்னைமரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.