சென்னை: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அவகாசத்தை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களின் இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் ஏதாவது செய்ய விரும்பினால், ஏற்கெனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் திருத்தம் செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.
The post அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.