முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்: அகிலேஷ் யாதவ் பேச்சு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலராக கலைஞர் திகழ்ந்தார். கலைஞரை போல விளிம்புநிலை மக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன். உரிமைக்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று கூறினார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்: அகிலேஷ் யாதவ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: