மேலும் பலர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்வதும் உண்டு. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி வாக்கிங் சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த, கனரா வங்கியின் ஓய்வு பெற்ற உதவி பொதுமேலாளர் ஏ.வெங்கட்ராமன் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியில் சந்தித்தார். அப்போது அவர் முதல்வரிடம், ‘‘சார் ஒரு நிமிஷம்.. என் கருத்தை கூறலாமா..’’ என்று கேட்டார். உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சொல்லுங்க..’’ என்றார்.
உடனே வெங்கட்ராமான், ‘‘ரொம்ப பிரமாதமா இருக்கு சார் உங்க நிர்வாகம்.
சிலர் சொல்றாங்க, நீங்க டெம்பிளுக்கு ஒண்ணும் பண்றதில்லைன்னு. ஆனால் உங்க அட்வைஸ்ல சேகர்பாபு அழகா பண்ணி அதுக்கு இன்கம்லாம் வரவைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை மிகச்சிறப்பாக செயல்படுது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. எல்லோரும் சொல்றாங்க. சேகர்பாபு கோயிலுக்கு வருமானத்தை அதிகரித்து இருக்கிறார். கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை யாரோ ஆக்கிரமித்து வைத்து இருக்கிறார்கள். அதனை எல்லாம் மீட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் யாரும் இதுவரை செய்ததில்லை’’ என்றார்.
இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘‘ஆமா.. ஆமா.. இன்னைக்கு அமைச்சர் சேகர்பாபு ஒரு பேட்டியில் கூட இதுக்கான பதிலை நன்றாக சொல்லி இருக்கார்..’’ என்றார். வெங்கட்ராமன் தொடர்ந்து பேசுகையில், ‘‘கோயிலில் நிறைய நடக்கிறது. குறிப்பா கும்பாபிஷேகம் அதிகமாக நடைபெறுது. முன்பெல்லாம் கும்பாபிஷேகமே கிடையாது – 10 வருசமா. இப்போ ஆயிரம் கும்பாபிஷேகங்கள் நடைபெற்று ஆயிரத்தோராவது கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது… நமஸ்காரம்’’ என்கிறார். இவ்வாறு உரையாடல் நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post சென்னை அடையாறில் நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர்: அறநிலையத்துறை அம்சமாக செயல்படுவதாக புகழாரம், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.
