அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. இது நூறு சதவீதமாக உயர வேண்டும். மாணவர்களாகிய உங்களுக்கு பெரிய சொத்து என்பது கல்விதான் அதில், கவனம் வைத்து படியுங்கள். விளையாட்டிலும் ஆர்வம் காட்டி உங்கள் திறமையை வெளிக் கொண்டு வாருங்கள்’’ என்றார். இதனை தொடர்ந்து, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 10 கோடி மதிப்பில் பல்வகை விளையாட்டுகளை உள்ளடங்கிய விளையாட்டு வளாகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் தலைமை வகித்தார். இதிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர், அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜா கண்ணப்பன், பி கே சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, மாவட்ட செயலாளர் இளைய அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: கவனம் வைத்து படியுங்கள், ஆர்வத்தோடு விளையாடுங்கள் appeared first on Dinakaran.