இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட 63 தமிழக மீனவர்களில், 15 பேர் கடந்த 21ம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் 15 பேர் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இந்திய தூதரகம் பராமரிப்பில் இருந்த தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று காலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இலங்கையிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருக்கும் மேலும் 21 தமிழக மீனவர்கள், அடுத்த ஓரிரு தினங்களில் சென்னை அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிப்பு 12 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்: அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.
