கடந்த 21ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் பணிகள் தொடங்கின. 22ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை போன்றவையும், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, கன்யா பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜையும், 8 மணிக்கு தீபாரதனையும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கடம் புறப்பாடு மற்றும் புனிதநீர் ஊற்றி ஐயப்பன் சன்னதி, விமானத்திற்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, `சரணம் ஐயப்பா’ கோஷமிட்டு வழிபட்டனர். கும்பாபிஷேக விழா முடிவுற்றதும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
The post தண்டலம் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.