முன்னதாக நெல்லை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி திமுக கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால் முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் யாரும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறவில்லை. ஒருசில அதிகாரிகள் மட்டுமே மனுக்களை பெற்றனர். இதனால் திமுக கவுன்சிலர்கள் மனுக்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர், சாலை பிரச்சினை உட்பட மக்களின் பிரச்சினைகளு க்கு மேயர் குரல் கொடுப்பதில்லை என்றும் கவுன்சிலர்களை மதிக்காமல் மேயர் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
The post நெல்லையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.