மேலும் பெரியநாயக்கம் பாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு பெரியநாயகம் பாளையம் கோட்டைபிரிவு என்ற இடத்தில் இருந்த தரைப்பாலத்தை கடக்க முயன்ற 19வயது இளைஞர் பிரதீப் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டார். அதனை தொடர்ந்து பெரியநாயக்கம் பாளையம் தீயணைப்பு துறையினர் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தடாகம் தாடியூர் பகுதியில் தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி அதிகளவு நீர் சென்றபோது பெண் உட்பட 5 பேர் நீரில் சிக்கிக்கொண்டனர். இதை அடுத்து தீயணைப்பு துறையினர் கயிறு மூலமாக 5 பேரையும் மீட்டனர். மேலும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
The post கோவையில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
