இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வள்ளியம்மாள் வயது மூப்பு காரணமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி துரைசாமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அக்கா இறந்த சோகத்தில் இருந்த தம்பி துரைசாமி நேற்றுமுன்தினமே திடீரென இறந்தார். ஒரே நாளில் அக்கா, தம்பி இறந்ததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து நேற்று இருவரின் சடலங்கள் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது. அக்கா இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post 57 பேரக்குழந்தைகளை பார்த்தவர்கள் 104 வயது அக்கா இறந்ததால் 102 வயது தம்பியும் உயிரிழப்பு appeared first on Dinakaran.