இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக தகவலறிந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். அவர்களிடம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பஸ்சில் பயணம் செய்யும் போது விழுந்து இருந்தால் டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு பதிவு செய்யலாம். மாடு யாருடையது என்பதை விசாரித்து அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் அல்லது சாலையில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடிக்காமல் விட்ட நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்வது முறையில்லை என கூறினர். இதனால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது என தெரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
The post மாடு தூக்கி வீசியதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி appeared first on Dinakaran.