இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 044-45674567 (20 இணைப்புகள்) கட்டணமில்லா தொலைபேசி எண். 1916 மேலும், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும். 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புகார் எண் அறிவிப்பு appeared first on Dinakaran.
