முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்..!!

சென்னை: முதுகலை மருத்துவம்/DNB & MDS இட சேர்க்கைக்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி தேவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். காலியாக உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும். முதுகலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post முதுநிலை படிப்புகளுக்கு மீண்டும் கலந்தாய்வு: மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: