ஸ்ரீவல்லிபுத்தூரில் மழையால் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமாவாசையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதே போல், ஈரோடு மோசிகீரனார் வீதியில் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீட்டுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்ததால் குழந்தைகள் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஈரோடு நாடார் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஈரோடு அன்னை சத்யா நகர், மல்லிநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
The post விடிய விடிய கொட்டிய கனமழை : சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை… மதுரையில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!! appeared first on Dinakaran.