அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். புதுக்குடி கிராமம் வடக்கு சுரைமேட்டு பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி ரமணா. கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி ரமணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.