சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை பற்றி நவ.1-ல் மூவர் குழு ஆலோசனை

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை பற்றி நவ.1-ல் மூவர் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு சார்பில் நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய மூவர் குழு ஆலோசிக்க உள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனையில் 5 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

The post சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை பற்றி நவ.1-ல் மூவர் குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: