நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறையினரிடம் படத் தயாரிப்பு தரப்பு கடிதம் கொடுத்திருந்தது. இந்த நிலையில் நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் லியோ பட வெற்றி விழாவுக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்று தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சான்று இன்று மாலை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டும் போதுமானது.
காவல்துறை வழங்கிய நிபந்தனைகள்
*லியோ வெற்றி விழாவை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்.
*நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 8000 இருக்கைகள் உள்ளன. காவல் துறை 6000 இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.
*பார்வையாளர்களுக்கு 5500 இருக்கைகளும் விஐபிகளுக்கு 500 இருக்கைகளும் ஒதுக்கிக் கொள்ளலாம். அரங்கின் மைய பகுதியில் தேவைப்பட்டால் இருக்கைகளை அமைத்துக் கொள்ளலாம்.
*நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்புத் தொகையாக ரூ 10 லட்சம் செலுத்த வேண்டும்.
*200-300 கார்களுக்கு மட்டும் அனுமதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வர அனுமதி இல்லை.
The post நவ. 1ல் நேரு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா.. நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி : நடிகர் விஜய் பங்கேற்பு; ரசிகர்கள் குஷி!! appeared first on Dinakaran.