கோட்சேவுக்கு கொடி பிடித்தவர்களின் ஏஜென்ட்டாக செயல்படும் ஆளுநர்: துரை வைகோ குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: கவர்னர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழக கவர்னர் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு கொடி பிடித்தவர் யார்? அந்த மாதிரி இயக்கங்களுக்கு ஏஜென்டாக தமிழக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

எனவே கவர்னருக்கு சுதந்திரப் போராட்டத்தை பற்றியோ, சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றியோ கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தேவையில்லாத சர்ச்சைகளை பாஜ கிளப்புகிறது. இந்தியா முழுவதும் பாஜ அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் செயல், அந்த மாநில அரசுகளுக்கு எதிராகத்தான் இருக்கிறது. வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோட்சேவுக்கு கொடி பிடித்தவர்களின் ஏஜென்ட்டாக செயல்படும் ஆளுநர்: துரை வைகோ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: