கோவை: உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மீது பாலஸ்தீன கொடியை பறக்கவிட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன கொடியை பறக்கவிட்ட 3பேர் மீது 3பிரிவுகளில் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பைசேர்ந்த சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.