திராவிடம் பற்றி ஆளுநரின் கருத்து குறித்து எனக்கு தெரியவில்லை: எடப்பாடி பேட்டி

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக தேர்தல் முகவர் கூட்டத்தில் முதல்வர் என்னை பற்றி பல்வேறு விமர்சனங்களை செய்துள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி பொய்யர் என்று குறிப்பிட்டுள்ளார். நான் எந்தவித பொய் செய்தியும் வெளியிட்டதே இல்லை. என்னுடைய அறிக்கையிலும், பேட்டியளிக்கும் போதும் பொய்யான செய்தியை எப்பொழுதும் கொடுத்ததில்லை.

திராவிடத்தை பற்றிய ஆளுநரின் கருத்திற்கு அறிஞர்களை பார்த்து கேட்டால்தான் பதில் கிடைக்கும். தவறான பதில் நான் கொடுத்து விடக்கூடாது, எனக்கு தெரியவில்லை. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். வர இருக்கிற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டிலும் பாஜவுடன் கூட்டணி இல்லை. இந்தியா கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திராவிடம் பற்றி ஆளுநரின் கருத்து குறித்து எனக்கு தெரியவில்லை: எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: