கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமாவாசை அன்று கோயில் நிர்வாகம் சார்பாக குளத்தை சீரமைக்கும் பணி நடந்ததாகவும், அதன்பிறகே நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, குளத்தில் ஏதாவது நச்சுப்பொருள் கலந்து இருக்கலாமா என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. செத்து மிதக்கும் மீன்களால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை கோயில் நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
The post கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.