கணினி கொள்முதலில் அண்ணா பல்கலையின் நிபுணர்கள் குழு, எல்காட் அல்லது நிக் நிறுவனங்களின் அதிகாரிகள் குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் கணினி நிபுணரும் இல்லை என எல்லோருக்கும் தெரியும். பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கணினி மென்பொருளை, வேறொரு நபருக்கு கொடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளில் உள்ளதைபோல் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், நகர கூட்டுறவு வங்கிகளில் இணையதள வசதிகள் என்னுடைய காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது.
இதில் யாரும் குறை சொல்லவில்லை. இச்சூழலில் என்னை பற்றிய இச்செய்தி தவறானது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜூம் என்னிடம் கேட்டுள்ளார். அவரிடம், இது முற்றிலும் பொய்யான செய்தி எனக்கூறியுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.
The post என் மீதான புகார் தவறானது: செல்லூர் ராஜூ விளக்கம் appeared first on Dinakaran.
