எனவே பலரும் கருகிய பயிர்களை அளித்து விட்டு சம்பா சாகுபடி செய்துள்ளனர். தற்போது சம்பா பயிர்களும் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன் வாய்க்காலில் உள்ள தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து வயலில் ஊற்றி பயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருகிறார். சம்பா பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்: வாய்க்கால் நீரை குடத்தில் அள்ளி பயிர்களை காப்பாற்ற முயற்சி appeared first on Dinakaran.
