கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலேரிபாளையத்தில் ரேக்ளா பந்தயம்

 

மதுக்கரை, அக்.9: கோவையை அடுத்த மயிலேரிபாளையம் ஊராட்சி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குதிரை பந்தயம் மற்றும் ரேக்ளா போட்டிகள் நடைபெற்றது. மயிலேரிபாளையத்தில் இருந்து ஏலூர் பிரிவு செல்லும் சாலையில் நடைபெற்ற இந்த போட்டியை கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், கிளை செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி திருமூர்த்தி, துணைத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

200 மீட்டர், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைப்பெற்ற இந்த போட்டியில் கோவை,சூலூர், பல்லடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, தாராபுரம், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 ஜோடி குதிரைகளும், 330 ஜோடி ரேக்களா காளை மாடுகளும் கலந்து கொண்டு சீறி பாய்ந்தன. ரேக்ளா போட்டியை காண சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், 2ம் பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், 3ம் பரிசாக கால் பவுன் தங்க நாணயங்களும் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ரகுதுரைராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், மதுக்கரை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், தூய்மை பணியாளர்கள் நலவாரிய துணைத்தலைவர் கனிமொழி, கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், நகர செயலாளர் கனகராஜ், நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் ரகு(எ)சண்முகசுந்தரம், ஏலூர் காமராஜ், கோடை குமார், முத்துக்கவுண்டனுர் குமார், ராதாகிருஷ்ணன், மாவுத்தம்பதி கணேஷ், மேத்யூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலேரிபாளையத்தில் ரேக்ளா பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.