செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 100 கன அடி நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுத்தப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் கரையின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடி; ஏரியின் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு 21.96 அடி; ஏரியின் நீர்வரத்து விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்ட உள்ளதால் நாளை உபரி நீர் திறக்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: