விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமீன்

மதுரை: விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கியது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பதால் முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

The post விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு முன்ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: