அதன் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேப்பங்குளம் விவசாயி அம்மையப்பன் கேள்வி எழுப்பினார். அப்போது ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், அது குறித்து நீ ஏன் பேசுகிறாய் என்று கேட்டபோது, கோபமாக விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் குளம் செயலர் தங்கபாண்டியன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
The post கிராம சபை கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை கைதுசெய்ய 5 தனிப்படைகள் அமைப்பு! appeared first on Dinakaran.