மகளிர் யு-17 கால்பந்து வெள்ளி வென்றது தமிழ்நாடு: அமைச்சர் உதயநிதி வாழ்த்து

சென்னை: தேசிய யு-17 மகளிர் கால்பந்து போட்டியில், தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த இந்த தொடரின் பைனலில் மணிப்பூர் – தமிழ்நாடு மகளிர் யு-17 அணிகள் மோதின. அதில் மணிப்பூர் அணி கடுமையாகப் போராடி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. 2வது இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தமிழ்நாடு அணியில் விளையாடிய வீராங்கனைகளில் 5 பேர் ஈரோடு எஸ்டிஏடி பயிற்சி விடுதியிலும், 2 பேர் திண்டுக்கல் எஸ்டிஏடி பயிற்சி விடுதியிலும் தங்கி படித்து வருகின்றனர். பயிற்சியாளர் அபர்ணா, மேலாளர் அஸ்வினியும் எஸ்டிஏடியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி வென்ற தமிழக அணியினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

The post மகளிர் யு-17 கால்பந்து வெள்ளி வென்றது தமிழ்நாடு: அமைச்சர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: