இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் புலிகள் உயிரிழப்பு குறித்து தமிழக வனத்துறை உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 10 புலிகள் உயிரிழந்ததை அடுத்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் உயிரிழந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், வெளி மண்டல துணை கள இயக்குனர்களிடம் ஆணைய குழுவினர் விசாரணை. நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் உள்ளிட்டோரிடம் தேசிய புலிகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
The post நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததை அடுத்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.
