சென்னை: எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் நடப்பாண்டில் சாலைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1,300க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைப் பணிகள் முடிந்தாலும் ஆய்வு செய்த பின்னரே ஒப்பந்த நிறுவனத்திற்கு தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சாலைப்பணிகள் முழுமையாக முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
The post எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் நடப்பாண்டில் சாலைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.
