அந்த வகையில், கடந்த 8 மாதங்களில் சென்னை மாநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 279 ரவுடிகள் மற்றும் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டு வந்த 71 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 49 குற்றவாளிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 3 பேர், உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என 412 பேர் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த லோகேஷ்(22), ஆதம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த டேனியல் ஜோசப்(22), வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த ஆனந்த்(எ)எலி ஆனந்த்(23), மும்பையை சேர்ந்த குலாம் அப்பாஸ்(50), சக்லென்(23),பெசன்ட் நகர் ஓடைமா நகரை சேர்நத் செல்வகுமார்(25), வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்த சரத்(23), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன்(23), வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்வரன்(எ)தடியா தினேஷ்(27), காசிமேடு பகுதியை சேர்நத் மதன்குமார்(26), ரெட்டேரி சாய்சத்யா நகரை சேர்ந்த பிரேம்(எ)பிரேம்குமார்(39) ஆகிய 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post சென்னையில் கடந்த 8 மாதங்களில் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த 412 பேருக்கு குண்டாஸ்: மாநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.