முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் ராதாகிருஷ்ணன் சிலை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது.

பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மார்பளவு சிலையை பள்ளி தலைமை ஆசிரியர் தனம் ஜெயிடு, உதவி தலைமை ஆசிரியர் ராமிரெட்டி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

The post முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளியில் ராதாகிருஷ்ணன் சிலை appeared first on Dinakaran.

Related Stories: