சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக சுட்டெரிக்கும் வெயிலில் இப்பணிகளை மாணவ, மாணவிகள் செய்ததாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் உத்தரவின்பேரில் இப்பணிகளை மாணவ, மாணவிகள் மேற்கொண்டார்களாம். தமிழக அரசு பள்ளி கல்வித்துறையை முன்னேற்றும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் சுட்ெடரிக்கும் வெயிலில் மாணவ, மாணவிகளை இதுபோன்ற வேலைகளை செய்ய வைத்ததை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
The post அரசு பள்ளியில் 2 மணிநேரமாக சுட்டெரிக்கும் வெயிலில் மண் அள்ளிய மாணவர்கள்: பெற்றோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.