வாணியம்பாடியில் டவர் அமைக்கும் பணி நடத்து வரும் நிலையில் போராட்டம்: கதிர்வீச்சினால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என அச்சம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பலால் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்க ஜேசிபி மூலம் 20 அடி பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு டவரை அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பபு தெரிவித்து வருகின்றனர். டவர் அமைத்தால் அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் உடல்நலம் பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனை எதிர்த்து 50-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவர் அமைய உள்ள இடம் பாலாற்று படுகை அருகே உள்ளதால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

The post வாணியம்பாடியில் டவர் அமைக்கும் பணி நடத்து வரும் நிலையில் போராட்டம்: கதிர்வீச்சினால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: