இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான 11ம் திருநாளான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் சதன்திருமலைக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, பஞ்சாயத்து தலைவர்கள் மாரியப்பன் தினேஷ், சரவண பெருமாள், பாஜக ஒன்றி பொதுச் சயலாளர் சண்முகவேல், பழனிவேல் ராஜன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆவணித்தபசு 13ம் திருநாளான (27ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
The post கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.