இதில், உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை 3 மாதத்தில் முடிவடையும் என்றும் தற்போதுதான் நீதிபதி நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தரப்பு தெரிவித்தது.
The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு செப்.8ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.