ஆளுநரின் பேச்சு அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது; ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம், பிரிவினையை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்கள் நம் கலாசாரம், உயிர்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தனர். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.