இது குறித்து புகார்தாரர், ஏ.கே.மணி எதிரி கோபாலகிருஷ்ணனிடம், நிலம் குறித்து கேட்டபோது, வாங்கிய முன்பணத்திற்கு வட்டியுடன் திருப்பி தருவதாக, கூறினார். ஆனால் பேசிய படி கோபாலகிருஷ்ணன் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேற்று (23.08.2023) கோயம்பேடு காவல் துணை ஆணையாளரை அனுப்பி மேற்படி மூத்த குடிமகன் திரு.ஏ.கேமணி அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்து முதியவரின் குறையை தீர்த்து வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் கோயம்பேடு துணை ஆணையாளர் திருமதி.G.உமையாள் அவர்களின் தலைமையில் காவல் குழுவினர் மேற்படி முதியவர் A.K.மணி அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்த போது, மேற்படி வழக்கு தொடர்பாக ஆவடி, காவல் ஆணையரகம், SRMC காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், மேற்படி புகார் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்பதால், முதியவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை சட்டப்படி அணுகி நிவாரணம் பெற அறிவுறுத்தப்பட்டார். அதன்பேரில் முதியவர் ஏ.கே.மணி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் மேற்படி மூதியவரின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்து குறைகளை கேட்டறிந்த சென்னை பெருநகர காவல் துறையினரின் அணுகுமுறையை முதியவர் ஏ.கே.மணி மற்றும் அவரது மனைவி மனதார பாராட்டி நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
The post சென்னை காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையாளர் appeared first on Dinakaran.
