ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 13 வரை 120 நாட்கள் 23,846.40 மில்லியன் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.