விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது. இன்று (15ம் தேதி) காலை 8 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சுதந்திர தினவிழா மற்றும் திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
The post கும்பகோணம் அலங்கார அன்னை பேராலய தேர்பவனி: இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு appeared first on Dinakaran.
