தெற்கு ரயில்வே தலைமை அதிகாரி கூறியதாவது: ரயில்வே வாரிய கொள்கையின்படி, டெபாசிட் கால அடிப்படையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான செலவை ஏற்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மாநில அரசின் சார்பில் தொடங்கப்பட்ட சிஎம்டிஏ இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல்கட்டமாக அரசு சார்பில் ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டில் பணிகள் முடிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக சென்னை கோட்ட அதிகாரிகள் தேவையான வரைபட திட்டங்கள் உள்ளிட்ட வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான சாத்தியக் கூறு கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்காக தனியார் நிலத்தின் ஒரு பகுதி கையகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல் appeared first on Dinakaran.