அப்போது ஒன்றிய அரசிடம் வலியுறுத்தாதது ஏன்?. என்.எல்.சி. நிறுவனத்தை நம்பி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அன்புமணி என்.எல்.சி.யை வெளியேறு என்று பேசி வருகிறார். அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆகும். அன்புமணி தனது தோட்டத்தில் இவர்களுக்கு வேலை வழங்குவாரா?. போராட்டத்தின் மூலம் கலவரத்தை தூண்டி உள்ளார்கள். அமைதியாக இருந்த கடலூர் மாவட்டத்தை வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவைத்து கலவர பூமியாக மாற்றி விட்டு சென்றுள்ளார்கள். பாமக போராட்டத்துக்கு உள்ளூர் மக்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தும் அன்புமணி ஏன் கூட்டணியில் உள்ள ஒன்றிய அரசிடமும், ஒன்றிய அமைச்சர்களிடமும் முறையிடவில்லை. ஒரு கட்சி தலைவர் பொதுமக்களை கலவரத்துக்கு தூண்டுபவராக இருக்கக் கூடாது, தூண்டும் விதமாக பேசவும் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அமைச்சராக இருந்தபோது ஒன்றிய அரசை வலியுறுத்தாதது ஏன்? என்எல்சி போராட்டம் மூலம் கலவரத்தை தூண்டியுள்ளார்கள்: அன்புமணிக்கு அமைச்சர் காட்டமான பதிலடி appeared first on Dinakaran.
