வனபத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.43.66 லட்சம்

 

மேட்டுப்பாளையம், ஆக.5: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா, ஆடி வெள்ளிக்கிழமைகள், அமாவாசை தினங்களில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனின் அருளாசி பெற்று செல்வது வழக்கம். மேலும், அம்மனை வேண்டி மொட்டை அடித்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். மேலும், அம்மனை வேண்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 15-ம் தேதி முதல் நேற்று 4ம் தேதி வரை 78 நாட்களில் பக்தர்கள் பொது உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்னர் கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கருணாநிதி மேற்பார்வையில் 20 பொது உண்டியல்கள் திறக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு காணிக்கைகளை எண்ணும் பணியானது துவங்கியது. இப்பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர். மாலையில் காணிக்கைகள் எண்ணும் பணியானது நிறைவடைந்தது.
இறுதியாக பக்தர்கள் கடந்த 78 நாட்களில் ரொக்கமாக ரூ.43,66,192-ம், தங்கம் 206 கிராம், வெள்ளி 661 கிராம் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தியுள்ளனர்.

The post வனபத்ரகாளியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.43.66 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.