மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: விவசாய சங்கம், இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

புழல்: சோழவரத்தில், மணிப்பூர் பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதலை நிறுத்த கோரி, ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், கலவரத் தீ இந்தியா முழுவதும் பரவாமல் தடுக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி உட்பட்ட காந்தி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் போஸ் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரதாப் சந்திரன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செந்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சரவணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜீவா மற்றும் குமார் சம்பத் குமரேசன் மதியழகன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் இதில், கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

The post மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: விவசாய சங்கம், இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: