அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டாக்டர் பிரபு திலக் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், கூடுதல் எஸ்.பி.க்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, கூடுதல் எஸ்.பி.க்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு, இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The post திருமணத்தை மீறிய பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் கடலோர காவல்படை ஏஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: டிஜிபி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
