கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை: யுவராஜ் அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு!

சென்னை: சேலம் ஓமலூர் பொறியியல் கல்லூரி தலித் மாணவர் கோகுல்ராஜ் ஜாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு சாகும் வரை 3 ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சிய 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக்கு எதிராக யுவராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

The post கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை: யுவராஜ் அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: