இதில் இருவருக்கும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள், உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர். இதில், கடந்த 30ம் தேதி, முத்துக்குமரன் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்து உடல் உறுப்புகளை தானம் செய்தனர். மேலும், சிறுவனின் தாயார் மாலா நேற்று திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.